×

தரைப்பாலத்தை பராமரிக்க கோரிக்கை

 

வருசநாடு, மே 7: மயிலாடும்பாறை பொன்னன்படுகை இடையே சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் தலைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த இரண்டு வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் நீர் வெளியேற முடியாமல் தரைப்பாலம் முழுவதும் மழை நீர் தேங்கி காணப்படும். அதுபோன்ற நேரங்களில் தரைப்பாலத்தை கடந்து செல்ல பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தரைப்பாலத்தில் நீர் உடனடியாக வெளியேறும் வகையில் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தரைப்பாலத்தை பராமரிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Mayiladumparai ,Ponnanpadugai ,Thaipal Bridge ,Dinakaran ,
× RELATED விவசாயத்துக்கும், குடிநீருக்கும்...